பிளாஸ்டிக் கழிவுகளை நீரில் கலப்பதால் அவை இறுதியில் கடலில் கலந்து பிளாஸ்டிக் துகள்கள் கடலில் இருந்து கிடைக்கும் உப்பிலும் கலந்து விடுகிறது. இது கேன்சர் நோய்க்கு வழி வகுக்கும் நமது அடுத்த சந்ததிகளை பெருநோய்களில் இருந்து பாதுகாக்க இப்போதே நாம் திட்டமிட வேண்டும். பிளாஸ்டிக் உபயோகத்தை குறைத்து பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சிக்கு பயன்படுத்த வேண்டியது அவசியம்.