கடல் பெண்கள்

கடல் மூலம் ஆண்கள் மீன் பிடித்து பிழைக்கிறார்கள். பெண்கள் பாசி சேகரித்து பிழைக்கிறார்கள். இந்த பாசி சேகரிக்கும் பெண்கள் பற்றிய குறும்படம் தமிழக பெண்களின் நெஞ்சுறுதியையும் அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளையும் வெளிக்கொணர்கிறது. நல்ல வேளை இந்த தொழிலில் இன்னும் வெளிநாட்டினர் நுழையவில்லை. நுழைந்த பிறகு தான் ஊடகங்கள் எல்லாம் இந்த பெண்கள் கடலின் உள்ளே குதித்து பாசி சேகரிப்பதால் “கடல் கலங்கி விட்டது. மீன் வளம் ஆஸ்திரேலியா சென்று விட்டது. எனவே கடலில் பெண்கள் குதிப்பதை தடை செய்ய வேண்டும்” என எழுதுவார்கள். அது வரை இவர்கள் தொழில் தடையின்றி நடக்க இறைவன் அருள் புரியட்டும்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.